குறிக்கோள்

குறிக்கோள்

கலாசார விழுமியங்களை பாதுகாத்தல்

சுற்றுச்சூழல் சுத்தத்தை பேணிப்பாதுகாத்தல்

நோய்த்தடுப்பு செயற்பாடுகளுக்கு ஒத்திசைவாக செயற்படுதல்

வியாபார நிறுவனங்களை ஒழுங்குபடுத்தலும், கட்டுப்படுத்தலும் 

மயானங்களின் பராமரிப்பு மற்றும் அதன் கட்டுப்பாடுகளை பேணிப்பாதுகாத்தல்

கட்டட வேலைகளை ஒழுங்குபடுத்தி  கட்டுப்படுத்தல்

நகரமய உருவாக்க செயற்றிட்டங்களை உருவாக்கலும் நடைமுறைப்படுத்தலும்

பொழுதுபோக்கு சுற்றுலா மையங்களை உருவாக்கலும் பராமரித்தலும்

பாலர் பாடசாலைகளை உருவாக்கி  சேவைகளை வழங்குதல்

குடிநீர் சேவைகளை வழங்குதல்

  • நிலைபேறான அபிவிருத்தி  செயற்றிட்டங்களை முன்மொழிதல்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்:பூநகரி பிரதேசசபையால் விநியோகம்!

பூநகரி பிரதேசசபை தனது பயணத்தின் மற்றுமொரு பரிணாமமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே தனது அன்றாட பணிகளில் பிரதான பணியாக குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துவந்திருந்த சபை தற்போது சுமார் இரண்டு மில்லியன் பெறுமதியிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரணைமாதா நகர் உப அலுவலகத்தில் பொருத்தியுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மூலமாக பெறப்பட்ட குடிநீரினை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிற்கு சலுகை கட்டணத்தில் வழங்கவும் பூநகரி பிரதேசசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலைதீவு உற்சவம்:தயாராகின்றது பூநகரி பிரதேசசபை!

பூநகரி பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 28ம் திகதி (28;.02;.2024) ஆரம்பமாகி 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. உற்சவ காலத்தில் ஆயிரக்கணக்கில் யாத்திரீகர்கள் பங்கெடுப்பர் என்பதால் அவர்களிற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி வழங்குவது பூநகரி பிரதேசசபையின் கடமையாகின்றது.தரை வழி தொடர்புகளற்ற நிலையில் கடல் வழி விநியோகமாக குடிநீர் பௌசர்கள் இழுவை இயந்திரங்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக எடுத்து செல்லப்படுவது வழமையாகும்.தமது அன்றாட பணிகள் மத்தியில் பாலை தீவு உற்சவத்திற்கு தயாராகின்றனர் பூநகரி பிரதேசசபை உத்தியோகத்தர்கள்.

பூநகரி:அழகே அழகு!

இலங்கையின் இயற்கை வளம் கொஞ்சும் பிரதேசங்களில் பூநகரி பிரதேசமும் ஒன்றாகும். நீலக்கடல்களும் பச்சை வயல்களும் பரந்து விரிந்து கிடக்கின்ற பூநகரி அவ்வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதில் அதிசயமொன்றுமில்லை. நடப்பாண்டில் பாரிய வளர்ச்சியை சுற்றுலா துறையிலும் சாதிக்குமென பூநகரி மண் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றது. நகரமயமாக்கல் மத்தியில் அழகு கொஞ்சும் கௌதாரி முனையினை முன்னிறுத்தி சுற்றுலா திட்டங்கள் வகுக்கப்படுகின்றது.  

வாடியடி :நகரமாகின்றது!

பூநகரி வாடியடியினை நகரமயமாக்குவது தொடர்பில் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முன்னாய்வு கருத்துரையாடல்கள் நடந்துவருகின்றது.
இக் கூட்டத்தில் (02.01.2024) மக்கள் பிரதிநிதிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர். நகரமாயக்கல் திட்டத்தின் கீழ் வாடியடியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் இனங்காணப்பட்டவை

சாதனை:முட்கொம்பன் தீ கட்டுப்பாட்டுக்குள்!

முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டுத்திட்டத்தின் பின் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவி இருந்தது. தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்துவந்த நிலையில் நேற்று பாரிய அளவில் தீ பரவ ஆரம்பித்தது. சம்பவம் தொடர்பில் பூநகரிப் பிரதேச சபையின் செயலாளர் இரத்தினம் தயாபரன் நேரில் சென்று கண்காணித்ததுடன் மாவட்ட இடர் முகாமைத்துவப்பிரிவுக்கும் தகவல் வழங்கினார். தொடர்ந்து கரைச்சிப் பிரதேச சபையின் தீ அணைப்புப் பிரிவின் உதவியுடன் தீப்பரவலைக்க கட்டுப்படுத்த முயற்சித்தபோதிலும் காட்டுப்பகுதிக்குச் செல்லும் பாதை இல்லாத நிலையில் எமது மோட்டார் கிறைண்டர் மூலம் பாதை வெட்டப்பட்டு அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்டதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.  

பூநகரி: முன்பள்ளி சிறார்களுக்கு சத்துமா!

LDSP PT2 நிதியீட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கான ஊட்டச்சத்து துணை உணவினை வழங்கும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தற்போதுள்ள நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளில் எதிர்கால சமுதாயத்தினரின் போசாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் LDSP PT2 திட்டத்தின் ஊடாக சபையின் எல்லை குட்பட்ட 54 முன்பள்ளிகளுக்கு 60 நாள் கொண்ட இத்திட்டம் கடந்த 02.05.2023 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினை சபையின் சன சமூக நிலையங்கள் ஊடாகவும் முன்பள்ளி பெற்றோர்களின் ஊடாகவும் வட்டார உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

சாதனை:இலவச கணணி கற்கை நெறி

வாடியடி பொது நூலகம் மற்றும் ஜெயபுரம் பொது நூலகத்தில் கணணி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கற்றலிற்கு கதிரைகள் வசதியான இடங்கள் எவையுமே தேவையில்லையென்பதை பல்லவராயன்கட்டு ஜெயபுரம் சிறார்கள் நிருபித்துள்ளனர்.

பலரது கோரிக்கைகளினையடுத்து பூநகரி பிரதேசபை தனது பொது நூலகங்களில் கணணி கற்கைகளை இலவசமாக மாணவர்களிற்கு வழங்க தொடங்கியுள்ளது. சபையின் துறைசார்ந்த உத்தியோத்தர்கள் தமது கடமை நேரத்திற்கு மேலதிகமாக கணணி கையேடுகள் சகிதம் கற்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஆவலுடன் காத்திருக்கும் வாடியடி பொது நூலகம் மற்றும் பல்லவராயன்கட்டு ஜெயபுரம் மாணவ சிறார்களை காணலாம்.

வரலாறு:சிற்றரசன் பல்லவராயனிற்கு சிலை!

பூநகரி மண்ணின் பழமையும் தொன்மையும் பாதுகாக்கும் நோக்கிலும் வரலாற்று பதிவுகளை நிலைநாட்டு நோக்கிலும் பல்லவராயன் கட்டு சந்தியில் பூநகரி மண்ணை ஆண்ட பல்லவ மன்னனின் சிலையினை நமது சபை நிதி மூலம் கடந்த 02.06.2023 அன்று கௌரவ அமைச்சர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் பூநகரி பிரதேச கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொதியும் சபை எல்லை குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது