பூநகரி பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 28ம் திகதி (28;.02;.2024) ஆரம்பமாகி 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. உற்சவ காலத்தில் ஆயிரக்கணக்கில் யாத்திரீகர்கள் பங்கெடுப்பர் என்பதால் அவர்களிற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி வழங்குவது பூநகரி பிரதேசசபையின் கடமையாகின்றது.தரை வழி தொடர்புகளற்ற நிலையில் கடல் வழி விநியோகமாக குடிநீர் பௌசர்கள் இழுவை இயந்திரங்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக எடுத்து செல்லப்படுவது வழமையாகும்.தமது அன்றாட பணிகள் மத்தியில் பாலை தீவு உற்சவத்திற்கு தயாராகின்றனர் பூநகரி பிரதேசசபை உத்தியோகத்தர்கள்.