பூநகரி பிரதேசசபை தனது பயணத்தின் மற்றுமொரு பரிணாமமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே தனது அன்றாட பணிகளில் பிரதான பணியாக குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துவந்திருந்த சபை தற்போது சுமார் இரண்டு மில்லியன் பெறுமதியிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரணைமாதா நகர் உப அலுவலகத்தில் பொருத்தியுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மூலமாக பெறப்பட்ட குடிநீரினை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிற்கு சலுகை கட்டணத்தில் வழங்கவும் பூநகரி பிரதேசசபை நடவடிக்கை எடுத்துள்ளது.