பூநகரி பிரதேசசபை தனது ஆளுகைக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய வேரவில் கிராமத்தில் மூன்றாவது கணணி மையம் மற்றும் பொது நூலகத்தை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது.
சுமார் 50வருடங்களின் பின்னராக நூலகமொன்றையும் கணணி வசதிகளையும் வேரவில் கிராமம் கண்டிருப்பதாக மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வேரவில் மற்றும் அதனையண்டிய வலைப்பாடு,கிராஞ்சி,பொன்னாவெளி மற்றும் பாலாவி என ஜந்து கிராமங்களை மையப்படுத்தி பொது நூலகம் மற்றும் கணணி கூடம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசசபை தனது ஆளுகைக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய வேரவில் கிராமத்தில் மூன்றாவது கணணி மையம் மற்றும் பொது நூலகத்தை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது.
எளிமையான திறப்புவிழா நிகழ்வில் மாணவர்கள்,மதத்தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக வாடியடி மற்றும் ஜெயபுரத்தில் இரு கணணி மயப்படுத்தப்பட்ட நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவதாக வேரவில் பொது நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமது உயர்தர வகுப்பு கல்விக்காக முழங்காவில்,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியாவென அலைந்து திரிந்த ஜந்து கிராம மக்களும் தமது சொந்த மண்ணிலேயே கல்வியை தொடர வழிவகுத்திருப்பதாக கல்விச்சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் பல்லவராயன்கட்டு சந்தியிலிருந்து மேற்காக இக்கிராமங்கள் அமைந்துள்ளன.
Month: March 2024
இணையதள அங்குரார்ப்பணம்






வேரவில் நூலகமும் திறக்கப்படுகின்றது!
பூநகரி பிரதேசசபை தனது பயணத்தில் மற்றுமொரு மைல் கல்லினை எட்டியுள்ளது.எவராலும் கண்டுகொள்ளப்படாதிருந்த வேரவில் உள்ளிட்ட ஜந்து கிராம மக்களிற்கான பொது நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
“முழங்காவிலிலும் மூட்டம்”
ஒருபுறம் பகலில் சுட்டெரிக்கு வெயில் வாட்டி வதக்கினாலும் அதிகாலை வேளை பனி மூட்டம் முழங்காவிலை மூடி மறைக்கின்றது.நல்லதொரு புகைப்பட கலைஞர் அவர்களது புகைப்படங்கள் சில :
Thanks:https://www.facebook.com/thiyaku.vasi
பாலைதீவு உற்சவம்:பக்தி பூர்வமாக முன்னெடுப்பு!
பூநகரி பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் கடந்த 28ம் திகதி ஆரம்பமாகி 03ம் திகதி (03;.03.2024) ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.
திருப்பலி- பூஜை மற்றும் ஆராதனைகளில் வடக்கின் அனைத்து மாவட்டங்ளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் யாத்திரீகர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அவர்களிற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி வழங்குவது பூநகரி பிரதேசசபையின் இம்முறையும் தனது அர்ப்பணிப்பு மிக்க கடமையினை ஆற்றியுள்ளது.
தரை வழி தொடர்புகளற்ற நிலையில் கடல் வழி விநியோகமாக குடிநீர் பௌசர்கள் இழுவை இயந்திரங்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக எடுத்து செல்லப்பட்டதுடன் சுமார் ஆறு நாட்களாக பணியாளர்கள் தங்கியிருந்து சேவைகளை ஆற்றியிருந்தனர்.