Cleanup Srilanka!

உலக துப்பரவு தினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபையால் தூய்மைப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 2024.09.28 ஆம் திகதி துப்பரவு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதற்கமைய எமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கேரதீவு சங்குப்பிட்டி பகுதியில் 2024.09.28 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி துப்பரவுப் பணியில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இணைந்து உலக துப்பரவு தினத்தினை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கினர்.

   

சிறார்களிற்கு இலைக்கஞ்சி!

தேசிய வாசிப்பு மாதம் 2024 முன்னிட்டு பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தனால் இன்று முன்பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு விழிப்புணர்வும் பொழுது போக்கு நிகழ்வாக சிறுவர் காட்டூன் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இலைக்கஞ்சியின் பயன்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

 

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – 2024

பூநகரி பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு பொதுநூலகம், பூநகரி பொதுநூலகம், இரணைதீவு பொதுநூலகம் ஆகியவற்றில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த   04.09.2024 அன்று  சபையின் செயலாளர் தலைமையில் பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி இடம்பெற்றது.

கடந்த  04.09.2024 அன்று  சபையின் செயலாளர் தலைமையில் பூநகரி பொதுநூலகத்தில் தரம் 01,02 மாணவர்களுக்கான சொல்லாக்கப் போட்டி மற்றும் கட்டுரை கவிதைப் போட்டியும் இடம்பெற்றது.

கடந்த  07.09.2024 அன்று  சபையின் செயலாளர் தலைமையில் பூநகரி பொதுநூலகத்தில் தரம் 06,07 மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி , தரம் 08,09 மாணவர்களுக்கான விளக்கக்காட்சிப் போட்டி மற்றும் தரம் 03, 04 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி, தட்டச்சுப்போட்டி (Typing )இடம்பெற்றது.