முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டுத்திட்டத்தின் பின் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவி இருந்தது. தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்துவந்த நிலையில் நேற்று பாரிய அளவில் தீ பரவ ஆரம்பித்தது. சம்பவம் தொடர்பில் பூநகரிப் பிரதேச சபையின் செயலாளர் இரத்தினம் தயாபரன் நேரில் சென்று கண்காணித்ததுடன் மாவட்ட இடர் முகாமைத்துவப்பிரிவுக்கும் தகவல் வழங்கினார். தொடர்ந்து கரைச்சிப் பிரதேச சபையின் தீ அணைப்புப் பிரிவின் உதவியுடன் தீப்பரவலைக்க கட்டுப்படுத்த முயற்சித்தபோதிலும் காட்டுப்பகுதிக்குச் செல்லும் பாதை இல்லாத நிலையில் எமது மோட்டார் கிறைண்டர் மூலம் பாதை வெட்டப்பட்டு அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்டதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.