பாலைதீவு உற்சவம்:பக்தி பூர்வமாக முன்னெடுப்பு!

பூநகரி பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் கடந்த 28ம் திகதி ஆரம்பமாகி 03ம் திகதி (03;.03.2024) ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.
திருப்பலி- பூஜை மற்றும் ஆராதனைகளில் வடக்கின் அனைத்து மாவட்டங்ளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் யாத்திரீகர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அவர்களிற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி வழங்குவது பூநகரி பிரதேசசபையின் இம்முறையும் தனது அர்ப்பணிப்பு மிக்க கடமையினை ஆற்றியுள்ளது.
தரை வழி தொடர்புகளற்ற நிலையில் கடல் வழி விநியோகமாக குடிநீர் பௌசர்கள் இழுவை இயந்திரங்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக எடுத்து செல்லப்பட்டதுடன் சுமார் ஆறு நாட்களாக பணியாளர்கள் தங்கியிருந்து சேவைகளை ஆற்றியிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *