தேசிய வாசிப்பு மாதம் 2024 முன்னிட்டு பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தனால் இன்று முன்பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு விழிப்புணர்வும் பொழுது போக்கு நிகழ்வாக சிறுவர் காட்டூன் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இலைக்கஞ்சியின் பயன்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

பூநகரி பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு பொதுநூலகம், பூநகரி பொதுநூலகம், இரணைதீவு பொதுநூலகம் ஆகியவற்றில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த 04.09.2024 அன்று சபையின் செயலாளர் தலைமையில் பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி இடம்பெற்றது.
கடந்த 04.09.2024 அன்று சபையின் செயலாளர் தலைமையில் பூநகரி பொதுநூலகத்தில் தரம் 01,02 மாணவர்களுக்கான சொல்லாக்கப் போட்டி மற்றும் கட்டுரை கவிதைப் போட்டியும் இடம்பெற்றது.
கடந்த 07.09.2024 அன்று சபையின் செயலாளர் தலைமையில் பூநகரி பொதுநூலகத்தில் தரம் 06,07 மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி , தரம் 08,09 மாணவர்களுக்கான விளக்கக்காட்சிப் போட்டி மற்றும் தரம் 03, 04 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி, தட்டச்சுப்போட்டி (Typing )இடம்பெற்றது.



பூநகரி பிரதேசசபை தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இரணைதீவு உப அலுவலகத்திற்குட்பட்ட முழங்காவில் வட்டாரம் மற்றும் வாடியடி உப அலுவலகத்;திற்குட்பட்ட ஞானிமடம் வட்டாரம் என்பவையே அபிவிருத்தியடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கடந்த ஜீன் 14ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பிலேயே பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் சபைக்குட்பட்ட முன்பள்ளியான பூநகர் முன்பள்ளியின் மழலைகளின் விளையாட்டு மற்றும் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு கடந்த 19.06.2024 அன்று சபையின் செயலாளர் திரு இரத்தினம் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.


